கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

by Staff / 22-02-2023 03:03:22pm
கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பாஜக போராட்டத்தில் சர்ச்கைக்குரிய வகையில் பேசிய பாஜக நிர்வாகி முன்னாள் ராணுவவீரர் கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் கீழ் திருவல்லிக்கேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் ராணுவவீரர் கர்னல் பாண்டியன், திமுக கொள்ளை அடிப்பதிலும், கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள். வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள். எங்களை அந்த சூழலுக்கு தள்ளாதீர்கள் என்று பேசியிந்தார்.

 

Tags :

Share via