அனுமதியின்றி இயங்கிய ஆசிரமங்களுக்கு நோட்டீஸ்

by Staff / 26-02-2023 01:13:18pm
அனுமதியின்றி இயங்கிய ஆசிரமங்களுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் மீது பாலியல் அத்துமீறல்கள் மற்றும் உளவியல் தொந்தரவு ஆகியவை நிகழ்த்தப்பட்டது தெரியவந்தது. அதன்பின் அந்த ஆசிரமம் மீது அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழகம் முழுவதும் இவ்வாறு இயங்கும் ஆசிரமங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகள் துறை, சுகாதாரத்தூறை, சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 18 காப்பகங்கள் அனுமதி இன்றி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆசிரமங்கள் ஒருவாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via