புதுச்சேரி - சென்னை இடையே கப்பல் போக்குவரத்து
புதுச்சேரி - சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்க உள்ளது. இதன்மூலம் பயண நேரம், செலவு ஆகியவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கப்பல்கள் இயக்க சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக துறைமுக அமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் போக்குவரத்து தொடங்குகிறது. வாரத்தில் 2 நாட்கள் சரக்கு கப்பல்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் போக்குவரத்தை காண பொதுமக்கள் கூடியுள்ளனர்.
Tags :