கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

by Staff / 28-02-2023 02:27:57pm
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

கோவை மாவட்டம் பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார், இவருக்கு நேற்று பீளமேடு அடுத்த தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது, அங்கு மதுரையைச் சேர்ந்த 22 வயதான கிஷோர் குமார் என்கின்ற கிஷோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via