விவசாயிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் ரத்து

by Staff / 29-02-2024 12:50:57pm
விவசாயிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் ரத்து

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஹரியானா காவல்துறை தயாராக உள்ளது. சமீபகாலமாக ஏற்பட்ட பதற்றத்தில் பல விவசாயிகள் அரசு சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளனர். அந்த விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை ரத்து செய்ய ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via