வடமாநிலத்தொழிலாளர்கள் அச்சத்தை போக்க அதிகாரிகள் கூட்டுப்பேட்டி
திருப்பூர் : மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , துணை கண்காணிப்பாளர் கூட்டாக பேட்டி
திருப்பூரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பெரும்பாலும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது அவை கணக்கெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வட மாநில தொழிலாளர்கள் பாதிப்பு இருப்பின் தகவல் தெரிவிக்க கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.காவல் ஆய்வாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாகவே இருந்து வருகிறது அது தொடர்ந்து பாதுகாக்கப்படும்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கக் கூடிய வகையிலான கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தை போக்க காவல் துணைக்கண்காணிப்பாளர் இந்தியிலும் பேட்டி அளித்தார்.
Tags :