மாணவனுடன் ஓடிய இளம் ஆசிரியை
10ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஒருவர் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் சந்தாநகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனியார் பள்ளியில் பணிபுரியும் 26 வயது ஆசிரியை, 10ஆம் வகுப்பு மாணவனை (15) காதலித்து வந்தார். இந்த நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் காணாமல் போனார்கள். விசாரணையில், சிறுவன் ஆசிரியையுடன் சென்றிருப்பதும், இருவரும் காதலித்து வந்ததையும் போலீசார் அறிந்தனர். ஆசிரியைக்கு வீட்டார் திருமண வரன் தேடி வந்த நிலையில், இந்த விபரீதமான முடிவை எடுத்துள்ளார். இருவரது குடும்பத்தினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
Tags :