தவறவிட்ட நகையை ஒப்படைத்த ரயில்வே போலீசார்
ஈரோட்டை சேர்ந்தவர் 27 வயதான சுவேதா ஸ்ரீ, இவர் நாகர்கோவிலில் இருந்து ரயிலில் ஈரோடு சென்றார்,ஈரோடு வந்ததும் சுவேதா ஸ்ரீ தனது உடமைகளை எடுத்து கொண்டு இறங்கினார், அப்போது அவர் தனது கையில் இருந்த நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்,
உடனே அவர் தான் இருந்த இடத்தில் தேடி பார்த்தார், ஆனால் கிடைக்கவில்லை. அவர் வந்த ரயிலும் புறப்பட்டு சென்றது. ரயிலில் தான் நகை விழுந்திருக்க வேண்டும் என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது,
பின்னர் இதுகுறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசாரிடம் கூறினார், போலீசார் அவர் வந்த ரயில் பெட்டி குறித்து விசாரித்து உடனே கோவை ரயில்வே போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்,
நாகர்கோவில் ரயில் கோவை வந்து நின்றது, அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீஸ் சுரேஷ் உடனே சுவேதா ஸ்ரீ வந்த ரயில் பெட்டியில் ஏறி சோதனை செய்தார். அப்போது அவர் தவற விட்ட ஒரு பவுன் நகை அங்கு இருந்தது,அதனை போலீஸ்காரர் சுரேஷ் பத்திரமாக எடுத்து போலீஸ் நிலையம் சென்றார், பின்னர் சுவேதா ஸ்ரீக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நேற்று கோவை வந்தார் அவரிடம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி முன்னிலையில் அந்த நகையை திருப்பி ஒப்படைத்தனர்,
நகையை பெற்று கொண்ட சுவேதா ஸ்ரீ மகிழ்ச்சி அடைந்து போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
Tags :