பாமக பெண் நிர்வாகியை கொலைசெய்த கள்ளக்காதலன். 

by Editor / 06-03-2023 08:02:59am
 பாமக பெண் நிர்வாகியை கொலைசெய்த கள்ளக்காதலன். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவர்களது மகள் மாரியம்மாள்.இவர்  குருவிகுளம் யூனியன் பா.ம.க. மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். இவர் தன் கணவரை விட்டு பிரிந்து ரெங்கசமுத்திரத்தில் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்தபோது மாரியம்மாள் வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரை காணவில்லை. இதனால் அவரது தாய்க்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது மாரியம்மாள் என்பது உறுதியானது. மேலும் அவரது உடல் அருகே அவரது மொபட்டும் நின்றது. இதையடுத்து மாரியம்மாள் சாவில் மர்மம் இருப்பதாக சண்முகத்தாய் சங்கரன்கோவில் தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மாரியம்மாளை கொலைசெய்து தண்டவாளம் அருகில் போட்டு சென்றது தெரியவந்தது.இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் மாரியம்மாளுக்கும் சங்கரன்கோவில் அருகிலுள்ள புளியம்பட்டியை சேர்ந்த முத்துகாலடி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துவந்ததாகவும்,மாரியம்மாள் தன்னை விடுத்து மற்றொருநபருடன் தொடர்பில் இருந்ததாகவும்,இதனை அவரிடம் கூறி கண்டித்ததில் வாக்குவாதம் உருவானது இதனால் ஆத்திரமடைந்த  தான் அவரை கொலைசெய்து தனது நண்பர் சுப்பையா என்பவருடன் சேர்ந்து ரயில் தண்டவாளத்தின் அருகில் போட்டு சென்றதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

 

Tags :

Share via