அனல் மின் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை
தூத்துக்குடியில் தமிழக அரசின் மின் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையம் உள்ளது.
இங்கு ஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பகுதியில் ஒப்பந்த ஊழியராக தூத்துக்குடி கோயில் பிள்ளை நகரைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார்.நேற்று மாலை வழக்கம் போல் பணிக்கு வந்த பிரசாத் கரி கையாளும் பகுதியில் வேலை பார்த்துள்ளார். திடீரென இரவு அவரை காணவில்லை என சக ஊழியர்கள் தேடியதில் பிரசாத் நிலக்கரி கையாளும் பகுதியில் உள்ள ஊழியர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தெர்மல் நகர் போலீசார் பிரசாத்தின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பிரசாத் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்தூத்துக்குடியில் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :