வழக்கறிஞர் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளிக்கு துப்பாக்கி சூடு-எஸ்.பி.நேரில் ஆய்வு.
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜப்பிரபு,காவலர் சுடலை குழுவினர் கைது செய்ய முயலும் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப ஓட முயன்றதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி ஜெயக்குமார் காலில் காயம்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Tags :