சிறுவனை கொடூரமாக கடித்த தெருநாய்

by Staff / 18-03-2023 12:55:10pm
சிறுவனை கொடூரமாக கடித்த தெருநாய்

தெலுங்கானா மாநிலம் கோதாவரிகானியில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. சாலையில் நடந்து சென்ற சிறுவனை, தெருநாய் ஒன்று பாய்ந்து சென்று திடீரென கடித்துக் குதறியது. அப்பகுதியில் சுற்றி நின்ற இளைஞர்கள் சிலர் தெருநாயை கல் வீசி விரட்டியடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நாயை விரட்டி, சிறுவனின் உயிரை காப்பாற்றினர். இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அடிக்கடி நடந்து வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் 2 குழந்தைகளை தெருநாய் கடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via