விபத்தில் 6 பேர் பலி
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர சாலை விபத்து நடந்தது. பட்டலப்பள்ளியில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஒன்று சென்றுள்ளது. பொட்லமரி என்ற பகுதியில் சென்றபோது அந்த ஆட்டோ மீது சரக்கு வாகனம் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு குழந்தையுடன் மேலும் 2 பேர் தர்மாவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags :