சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

by Staff / 20-03-2023 12:53:34pm
சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி, ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார், அந்த சிறுமியின் உறவினரான 17 சிறுவன் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு சென்று வந்தான், இந்த நிலையில் சிறுவன், மாணவியிடம் திருமண ஆசைகாட்டி பேசி வந்ததாக தெரிகிறது. மேலும் மாணவியை வெளியூர் அழைத்துச்சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவியை, சிறுவன் கடத்தி சென்று, பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் 2 பேரும், கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் மாணவி கர்ப்பம் ஆனார், பின்னர் 5 வது மாத பரிசோதனைக்காக மாணவியை கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து சென்றுள்ளார், அப்போது 15 வயது மாணவி கர்ப்பமான தகவலை, அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மகளிர் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி வருவதை அறிந்த பெண்ணின் பெற்றோரும் நேற்று கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், இதன்பேரில், போலீசார் 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via