மோடியை புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்
இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலமாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்றாலும், வீரர்களுடன் துணை நின்று பிரதமர் மோடி தட்டிக் கொடுத்துள்ளார். தனது குழந்தைகளாக வீரர்களை உற்சாகப்படுத்தி மனஉறுதியை உயர்த்தினார். பிரதமர் மோடியின் இந்த செயல் மிகவும் சிறப்பான ஒன்று" என்று மோடியை புகழ்ந்துள்ளார்.
Tags :