அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை அமைச்சர் நேரு ஆய்வு

by Staff / 22-11-2023 03:18:25pm
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை அமைச்சர் நேரு ஆய்வு

சேலம் அரசு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முதல் மாடியில் எழும்பு முறிவு ஆப்ரேஷன் தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வந்த ஆப்ரேசன் தியேட்டர் பகுதியில் உள்ள ஏ. சியில் இருந்து கரும்பு புகை கிளம்பியது. இதை பார்த்த டாக்டர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் முதல் மற்றும் 2வது மாடியில் புகை பரவவியது. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறும் வரும் நோயாளிகளை ஊழியர்கள் ஸ்டெச்சர் மூலமாக அவசரமாக அவசரமாக வெளியே கொண்டு வந்து வேறு வார்டுக்கு மாற்றினர். தீயணைப்பு ஊழியர்கள் உள்ளே சென்று புகையை வெளியேற்றும் மிஷின் மூலம் அகற்றினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் பீதியில் உறைந்தனர். இந்த தீவிபத்தில் அதிஷ்ட வசமாக உயிரிழப்பு ஏதுமின்றி நோயாளிகள் அனைவரையும் வெளியேற்றினர். இந்நிலையில் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே. என் நேரு தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via