நடனமாடும் போது மாரடைப்பால் மாணவி மரணம்

by Staff / 13-08-2023 01:56:08pm
நடனமாடும் போது மாரடைப்பால் மாணவி மரணம்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் மாவட்டம், ஞாலகொண்டப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவி ப்ரதீப்தி (வயது 16). இவர் நேற்று தனது கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு நடனம் ஆடியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மாணவி ப்ரதீப்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.

 

Tags :

Share via