தென்காசி மாவட்ட புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட சாம்சன் பதவி ஏற்றுக் கொண்டார். 

by Editor / 13-01-2023 02:24:37pm
தென்காசி மாவட்ட புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட சாம்சன் பதவி ஏற்றுக் கொண்டார். 

.தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் - புதிதாக பொறுப்பேற்ற தென்காசி மாவட்ட எஸ்பி பேட்டி.


ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3-வது எஸ்பியாக சாம்சன் என்பவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட சாம்சன் பதவி ஏற்றுக் கொண்டார். 

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் கூறியதாவது-

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தென்காசி மாவட்டத்தில் தற்போது வரை சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறித்து உடனே நடவடிக்கை எடுத்து அதற்கு உடனடி தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுப்பவர்களின் ரகசியங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via