மாணவி கர்ப்பம்: மாணவர் கைது

by Staff / 21-03-2023 11:50:55am
 மாணவி கர்ப்பம்: மாணவர் கைது

காஞ்சிபுரம்: புள்ளலூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதித்தனர். அச்சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தனர். தனியார் கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வரும் லோகநாதன் புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி சென்று மாணவியிடம் பழகி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Tags :

Share via