எரிவாயு சிலிண்டரில் கசிவு.. தீக்கிரையான வீடு

by Staff / 23-03-2023 04:18:32pm
எரிவாயு சிலிண்டரில் கசிவு.. தீக்கிரையான வீடு

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் முண்டபாண்டே கிராமத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறி தீப்பிடித்ததில் வீடு எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்த பணம் தீயில் கருகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via