வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

by Staff / 23-03-2023 04:09:45pm
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கரூர் மாவட்டம் புலியூர் அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 24). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கவியரசு சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கவியரசுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் பிரேத பிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தற்கொலை குறித்து பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via