மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

by Staff / 02-04-2023 12:28:05pm
மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


சென்னை சென்டிரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை சனிக்கிழமை முதல் 25-ந்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மூர் மார்க்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10. 35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி - ஆவடி இடையே இரவு 11. 55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதும் நிறுத்தப்பட்டது.பட்டாபிராம் மிலிட்டரி - சென்னை சென்டிரல் இடையே இரவு 10. 45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி-சென்டிரல் இடையேயும், சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11. 30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்- வியாசர்பாடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும்.

சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பிரிட்ஜ் - சென்டிரல் இடையேயும், சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே காலை 7. 30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்- பேசின் பிரிட்ஜ் இடையேயும், சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே இரவு 9. 45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் கொருக்குபேட்டை- சென்டிரல் இடையேயும் பொதுவாக ரத்து செய்யப்பட்டது.

சென்னை சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11. 15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும். *சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11. 45 மணி நேரம் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11. 40 மணிக்கு இயக்கப்படும்.சென்டிரல் - ஆவடி இடையே நள்ளிரவு 12. 15 மணி நேரம் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12. 20 மணிக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 

Tags :

Share via