கடும் சூறாவளி.. 18 பேர் பலி
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி பேரழிவை உருவாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை தெற்கு மற்றும் மத்திய கிழக்கு மாநிலங்களில் வீசிய சூறாவளியால் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் பெரிய கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு சம்பவங்களில் இதுவரை மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும், மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :