மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகள்

by Staff / 03-04-2023 05:17:50pm
மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகள்


திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). இவருக்கு இரண்டு மனைவிகளும், நான்கு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். மாணிக்கத்தின் இரண்டாவது மகன் கணேசன் இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி மருதாம்பாளுக்கும், மாணிக்கத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வயலில் மரத்தடியில் படுத்திருந்த மாமனார் மாணிக்கத்தை, மருதாம்பாள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த மாணிக்கம் முசிறி ஜி.ஹெச்சிற்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதாம்பாளை தேடிவருகின்றனர்.

 

Tags :

Share via