மீன்பிடி படகுகள், வலைகளுக்கு தீவைத்த மர்ம நபர்கள்
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ராஜா போஸ் (46). இவர் சொந்தமாக பைபர் படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது 2 பைபர் படகு மற்றும் மீன் வலைகளை ஆத்தூர் டிசிஇ காலனியில் உள்ள கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இரவு யாரோ மர்ம ஆசாமிகள் படகு மற்றும் மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்துள்ளனர்.இதில் 2 படகுகளும், வலையும் எரிந்து சேதம் ஆனது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். இது தொடர்பாக ராஜா போஸ் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். படகுகளுக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.
Tags :