சேலையில் தீப்பற்றி எரிந்து பெண் பலி

by Staff / 05-04-2023 01:33:15pm
சேலையில் தீப்பற்றி எரிந்து பெண் பலி

தூத்துக்குடி முத்தையாபுரம் எம். சவேரியார் புரம், வடக்கு தெருவை  சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி (42), கடந்த மாதம் 21ஆம் தேதி தனது வீட்டில் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சேலையில் தீப்பிடித்தது.இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

 

Tags :

Share via