பாலியல் தொழிலாளியுடன் திருமணம் - துண்டு துண்டாக வெட்டிக்கொலை

by Staff / 05-04-2023 01:57:25pm
பாலியல் தொழிலாளியுடன் திருமணம் - துண்டு துண்டாக வெட்டிக்கொலை

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஜெயந்தன்(29). சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இவர், மார்ச் 18ஆம்தேதி மாயமானார். போலீசார் அவரை தேடிய நிலையில், ஜெயந்தனுக்கும் புதுக்கோட்டை ஆலவாயலைச் சேர்ந்த பாலியல் தொழிலாளியான பாக்கியலட்சுமிக்கும்(38) திருமணம் நடந்து பிரிந்தது தெரியவந்தது. இதனிடையே மார்ச்19 அன்று புதுக்கோட்டை சென்ற, ஜெயந்தன் தன்னுடன் வருமாறு பாக்கியலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து ஜெயந்தனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சென்னை வந்து கோவளம் கடற்கரை பகுதியில் புதைத்தாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via