அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - ஒருவர் கைது

by Staff / 05-04-2023 02:54:00pm
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - ஒருவர் கைது

மதுரை கோ. புதூரில் வேலை வாங்கி தருவதாக ரூ ஏழரை லட்சம் மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் ஸ்ரீ துர்கா 23. இவரிடம் கே புதூர் கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்த முத்துக்குமார் 50 என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய ஸ்ரீதுர்கா ரூ பதினோரு லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்துக்குமார் அவருக்கு சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. ஏமாற்றிய வருவதாக தெரிய வந்தது. இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதில்ரூ மூன்று லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர்.சில நாட்கள் கழித்து மீதமுள்ள பணத்தை கேட்டபோது தராமல் அவரை குடும்பத்துடன் மிரட்டியுள்ளனர். இது குறித்து ஸ்ரீ துர்கா கோ. புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் முத்துக்குமார் 50 அவருடைய மனைவி பிரபா மகன் ஸ்ரீஹரி மருமகன் சுரேந்தர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்

 

Tags :

Share via