மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்: அன்புமணி

by Staff / 15-05-2023 12:51:50pm
மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்: அன்புமணி

மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்; மதுக்கடைகளையும், பார்களையும் மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தால் அது சட்டம் - ஒழுங்கு சிக்கலாக மாறும் ஆபத்து உள்ளது. அதற்கு எந்த வகையிலும் தமிழக அரசு இடம் கொடுத்து விடக் கூடாது. மதுக்கடைகளால் பெண்களும், குழந்தைகளும் அனுபவித்து வரும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. மதுவுக்கு எதிரான மக்களின் இந்த கோபத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார்.

 

 

Tags :

Share via