மூதாட்டி தாக்கி பாலியல் தொல்லை

by Staff / 05-04-2023 04:56:18pm
 மூதாட்டி தாக்கி பாலியல் தொல்லை

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த அரிய குழந்தை புதூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனைவி நல்லம்மாள் (85) இவர் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் நித்யா ராஜவேல் கூலித் தொழிலாளி இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நல்லம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்தவர் நல்லம்மாளை தாக்கியதுடன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று நல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via