போக்சோ குற்றவாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்

by Staff / 08-03-2023 03:21:23pm
போக்சோ குற்றவாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (67). பழனிச்சாமி துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போஸ்கோ வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கின்றார்.
இந்த நிலையில் இவருக்கு டிபி நோய் ஏற்பட்ட நிலையிலே, சிறை மருத்துவர் சிகிச்சை தந்திருக்கின்றார். சிறை மருத்துவர் பரிந்துரையின் பெயரில் கோவை மாவட்ட தலைமை அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மருத்துவர்களால் தரப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை இருந்தபோது பரிதாபமாக பலியானார்.
இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கின்றது.

 

Tags :

Share via