மாங்காய் பறித்த பெண்களுக்கு கத்திக்குத்து-வாலிபர் கைது

by Editor / 11-12-2022 07:42:21am
மாங்காய் பறித்த பெண்களுக்கு கத்திக்குத்து-வாலிபர் கைது

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கீரிக்கோட்டைச் சேர்ந்த பிஜூ. இவர் வீட்டு வளாகத்தில் மாமரம் ஓன்று உள்ளது. அந்த மரத்தில் காய்த்துள்ள  மாங்காய்களை  பக்கத்து வீட்டிலுள்ள சுமிதா,மினி ஆகிய 2 இளம் பெண்கள் 1சிறுமியென 3 பேர் சேர்ந்து பறித்துள்ளனர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த மரத்தின் உரிமையாளர் பிஜூ மற்றும் 2  பேர் என மொத்தம் 3 பேர் கொண்ட கும்பல்  அந்த பெண்களை கத்தியால் தாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த இளம்பெண்களை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிஜூவை கைது செய்தனர்.மற்ற 2 பேர்களை தேடிவருகின்றனர்.ஏற்கனவே பிஜு வுக்கும் பாதிக்கபட்ட பெண்கள் குடும்பத்தினருக்கும் ஓணம் பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததுதொடர்பாக மோதல் இருந்துவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via