டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

by Staff / 27-12-2022 05:19:28pm
டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவை வழக்கறிஞர் லோகநாதன் டாஸ்மாக் குறித்த விவரங்களை கேட்டப்பொழுது, அது மூன்றாம் நபர் வர்த்தகம் தொடர்புடையது என கூறி விவரங்களை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் வழக்கறிஞர் லோகநாதன் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமனறம், டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்னும் விவரங்களை ஜனவரி 6ம் தேதி சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி விவரங்களை சமர்ப்பிக்காத டாஸ்மாக்குக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், அந்த அபராத தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via