தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

by Editor / 11-12-2022 07:26:43am
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்யவாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி  உள்பட 12 மாவட்டங்களில் இன்று 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

12, 13ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

11ஆம் தேதி வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடையிடையே தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், இன்று மீனவர்கள் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via