நடிகை ஜெயலட்சுமி பண மோசடி

by Staff / 27-10-2022 01:02:05pm
 நடிகை ஜெயலட்சுமி பண மோசடி


சினேகம் அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண மோசடி செய்வதாக திரைப்பட பாடலாசிரியர் சினேகன் போலீஸில் புகார் அளித்தார். அதன் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது, சென்னை திருமங்கலம் போலீசார் பிரிவு 420 ஏமாற்றுதல், சட்டப்பிரிவு 465ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via