48 மணி நேரத்தில் 49 பேர் உயிரிழப்பு

by Staff / 04-10-2023 01:09:01pm
48 மணி நேரத்தில் 49 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாந்தேட் மற்றும் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 49 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் கிடைக்காததே இதற்கு காரணம் என மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via