கனமழையால் 7000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 08-11-2022 08:57:51am
கனமழையால் 7000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு  செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரால்வய்மொழி,
சுசிந்திரம், பார்வதிபுரம்,கோட்டர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துவருகிறது.மேலும் கன்னியாகுமரி அரபிக்கடல் பகுதிகளில் இடி-மின்னலுடன் பெய்து வரும் கனமழையால் 7000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via