பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலை ஆராய்ச்சிப்பள்ளி வருகிறது. இன்று காலை 10வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத வந்த மாணவிகள் அங்குள்ள கழிவறை பகுதிக்கு சென்ற போது கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் வர்ஷினி இசக்கி பிரியா, விஜயா ப்ரியா, மாரியம்மாள், மகரஜோதி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
அரசு பொதுத் தேர்வு நடைபெற்றதால் தேர்வு எழுதிய பிறகு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று ஆசிரியர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. உடலில் ஏற்பட்ட காயத்துடன், வலியையும் பொறுத்துக் கொண்டு மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்த நிலையில் தற்போது எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளியை முறையாக பராமரிக்காததை கண்டித்து மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்
Tags :