போர் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுகோய் 30 எம்கேஐ (Sukhoi 30 MKI) போர் விமானத்தில் முதன்முறையாக பறந்தார். மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் அசாம் மாநிலத்துக்குச் சென்றுள்ள அவர், தேஸ்பூர் விமானப்படை தளத்திற்கு சென்றபோது அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்ட்டது. அதன்பின், விமானிகள் சீருடையை அணிந்து சுகோய் விமானத்தில் சிறிது நேரம் சுற்றினார். இந்த விமானத்தை குரூப் கேப்டன் நவீன் குமார் திவாரி இயக்கினார். இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 2009ல் போர் விமானத்தில் பறந்தார்.
Tags :