பல் பிடுங்கபட்டு சித்திரவதை:அமுதா ஐஏஎஸ் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை
நெல்லை அம்பாசமுத்திரம் பல் பிடுங்கபட்டு சித்திரவதை விவகாரத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டுக்குழு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் நேற்று நெல்லை வந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.இதனைத் தொடர்ந்து இன்று நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.அங்கு பல் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை செய்ய உள்ளார்.
Tags :