அமுதா ஐஏஎஸ் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில்காலை 10 மணிமுதல் மாலை4.00 வரை விசாரணை
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை கைதிகளின் பல்லை புடுங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது இதன் காரணமாக உதவி காவல் கண்காணிப்பாளர்பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இப் பிரச்சனை சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கொண்டுவரப்பட்டது. அதனை அடுத்து தமிழக அரசு சார் ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டது .சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் , பல் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்துமேல்மட்ட விசாரணை நடத்துவதற்காக ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார் காலை 10 மணிமுதல் மாலை4.00 வரை அமுதா ஐஏஎஸ் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் பல் பிடுங்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்வார் .அவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கப்பட்ட சார் ஆட்சியர்னுடைய விசாரணை அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
Tags :