வயநாடு தொகுதியின் பாராளுமன்றஉறுப்பினர் தகுதியை இழந்த பின்பு ராகுல் காந்தி இன்று செல்கிறார்.
: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய தொகுதியான வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு இன்று பயணம் ஆகி உள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி சமூகம் குறித்து பேசியதின் எதிரொலியாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு ,வழக்கினுடைய தீர்ப்பு சமீபத்தில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கியது,சூரத் நீதிமன்றம். அத்துடன் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்வதற்கும் நீதிமன்றம் அனுமதி அளித்தது இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றதன் காரணமாக பாராளுமன்ற செயலகம் ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் தகுதி இழந்துவிட்டார் என்று அவருடைய பதவியை செயலிழக்கம் செய்தது .இந்தியாமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமான போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில்வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்த பின்பு ராகுல் காந்தி இன்று முதல் முறையாகத் தொகுதிக்கு செல்கிறார்.
Tags :