திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் தரிசன நேரம் குறைப்பு.

by Editor / 09-01-2022 10:10:07pm
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் தரிசன நேரம் குறைப்பு.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை 3:00 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில்  மூன்று மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.தங்கத்தேர் ரத்து செய்யப்பட்டுள்ளது.மார்கழி மாத பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

 

Tags :

Share via