கஞ்சா செடி வளர்த்த நபர் கைது.

by Staff / 14-12-2022 01:33:24pm
கஞ்சா செடி வளர்த்த நபர்  கைது.

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கண்மாய் கரையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில்.கண்காணிக்கானித்து கஞ்சா செடி வளர்ப்பவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் கண்மாய் கரையில் கஞ்சா செடி வளர்ந்து வருவதை பார்த்த போலீசார் வளர்த்து வரும் நபரை பிடிக்க திட்டமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.அப்போது செல்லூர், மணவாளன் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அறிவு என்னும் இளைஞர் கஞ்சா செடிக்கு தண்ணீர் ஊற்ற வந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விதைகள் கண்மாய் கரையில் எதார்த்தமாக விழுந்து வளர்ந்து வருவதாகவும், சில நாட்களுக்கு முன்புதான் கஞ்சா செடி பெரிதாக வளர்ந்து வருவது தெரிய வந்தது இதனால் தினமும் தண்ணீர் ஊற்றி செடியை வளர்த்து வருவதாக கூறினார்.அவரை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்த போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒருகிலோ125 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர்.கண்மாய் கரையில் வளர்ந்த கஞ்சா செடிகளை அளித்த போலீசார் மேலும் தினேஷ் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via