2 வயது சிறுவன் வாளியில் விழுந்து உயிரிழப்பு

by Staff / 13-04-2023 11:28:03am
2 வயது சிறுவன் வாளியில் விழுந்து உயிரிழப்பு

கேரளாவின் ஆலப்புழா மாவட்டதத்தை அடுத்த அம்பலப்புழாவில், தாய் இறந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டு வயது குழந்தை குளியலறையில் தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், வினயன் மகன் விக்னேஷ் (2) என்ற குழந்தை உயிரிழந்தான். இச்சம்பவம் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் பாட்டி சகுந்தலாவும், வினயனின் அண்ணி திவ்யாவும் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குளியலறைக்குள் சென்ற குழந்தை தண்ணீர் நிரப்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தான். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via