முன்னாள் முதல்வர் உள்பட 41 பேர் மீது வழக்கு

by Staff / 13-04-2023 11:30:13am
முன்னாள் முதல்வர் உள்பட 41 பேர் மீது வழக்கு

ஜார்கண்ட் முதல்வருக்கு எதிராக பா.ஜ.க நடத்திய போராட்ட ஊர்வலம் வன்முறையானது. காவலில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நூற்றுக்கணக்கான பாஜகவினர் கற்களை வீசி காயப்படுத்தினர். பல போலீசாரும் தாக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பாபுலால் மராண்டி, ரகுபர் தாஸ், மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 41 பாஜக தலைவர்கள் மீது ராஞ்சி போலீசார் கலவரம் மற்றும் வன்முறை வழக்கு பதிவு செய்தனர். தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றபோது கலவரம் மூண்டது.

 

Tags :

Share via