ஈரோட்டில் நடந்த கொடூர சம்பவம்.
ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அவரது தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருப்பூர் மற்றும் பவானி பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த சிறுமிகளை தனிப்படை போலீசார் மீட்டனர் இந்த சிறுமிகளை பணத்திற்காக விபச்சாரத் தொழில் ஈடுபடுத்திய திருப்பூரை சேர்ந்த அங்கு சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுமிகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் என்பதால் அங்கு சாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags :