மது அருந்தி விட்டு காரை ஓட்டியதால் விபத்து.

by Editor / 03-11-2021 12:11:08pm
மது அருந்தி விட்டு காரை ஓட்டியதால் விபத்து.

மது அருந்திவிட்டு அதிவேகத்தில் கார் ஓட்டிய விபத்தில்  கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து  ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.
 
சென்னையில் சமீப காலமாக இரவு நேரத்தில் அதிவேக விபத்துக்கள் இல்லாத நிலையில் மீண்டும் கார் விபத்துகள் ஏற்பட துவங்கியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி நேற்று நள்ளிரவு  அதிவேகத்தில் சென்று கொண்டு இருந்த கார் சாலை தடுப்புகள் மீது மின்னல் வேகத்தில் மோதியதில்  கார் 100 மீட்டர் தூரம் சாலை நடுவே தூக்கி வீசப்பட்டு தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த காரில் 4 பேர் பயணம் செய்ததும் காரினை சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் ஓட்டி வந்ததாகவும் அவர் மது அருந்தி இருப்பது போலீஸ் பரிசோதனையில் உறுதியாகின.

இந்த விபத்தில் மேற்கு மாம்பலத்தை  சேர்ந்த மது கிருஷ்ணனும், அரும்பாக்கத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி நித்யஸ்ரீ, கேளம்பாக்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி மாணவி வந்தனா பயணம் செய்தது தெரியவந்தது.
 
போலீசார் விசாரணை மேற்கோள்ள காரின் பயணம் செய்த நான்கு பேரையும் போலீஸ் வாகனத்தில்  சாஸ்த்திரி நகர் காவல் நிலையம் அழைத்து  சென்றனர். இந்த விபத்தினால்  சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via