புது பைக் வாங்கி தந்தையிடம் காண்பித்து ஆத்திரத்தை ஏற்படுத்திய தம்பியை தீர்த்துக் கட்டிய அண்ணன்.

by Editor / 03-11-2021 12:14:53pm
புது பைக் வாங்கி தந்தையிடம் காண்பித்து ஆத்திரத்தை ஏற்படுத்திய தம்பியை தீர்த்துக் கட்டிய அண்ணன்.

தூத்துக்குடி அருகே புது பைக் வாங்கி தந்தையிடன் காண்பிக்க வந்த தம்பியை, அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற புலிப்பாண்டி. இவருக்கு இரண்டு மகள், மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன்  முனியசாமிக்கு சிறிது மனநிலை பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 2-வது மகன் செல்லத்துரை திருமணம் முடித்து சென்னையில் வசித்து வருவதாகவும்,. 3-வது மகன் முருகன் திருமணம் முடித்து ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தந்தை புலிப்பாண்டி  மூத்த மகனான முனுசாமிக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால், தனது சொத்துக்களை மற்ற இரண்டு மகன்களுக்கு மட்டும் எழுதிவைத்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி சொத்து பிரச்ச்னை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முருகன் தான் புதிதாக வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை தனது தந்தையிடம் காண்பிக்க தெற்கு பொம்மையாபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். ஸ்கூட்டரை காண்பித்து விட்டு இரவு நேரமாகி விட்டதால் தனது தந்தையின் வீட்டில் தனது மூத்த சகோதரர் முனியசாமியுடன் தங்கியுள்ளார்.
 
அவரது தந்தை மற்றொரு வீட்டில் தூங்கியுள்ளனார். இந்நிலையில் நள்ளிரவில் கட்டிலில் தூங்கி கொண்டு இருந்த தனது தம்பி முருகனை, முனியசாமி வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி படுகொலை செய்து விட்டு, பசுவந்தனை காவல் நிலையத்திற்கு சென்று தனது தம்பியை வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் படுகொலை செய்யப்பட்ட முருகன் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். கொலை குற்றவாளியான முனியசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் தனக்கு தந்தை சொத்து தராமல் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்தது மட்டுமின்றி, சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட முருகன் ஸ்கூட்டர் வாங்கி வந்து தந்தையிடம் காண்பித்தது ஆத்திரத்தினை ஏற்படுத்தியதாகவும்,

தனக்கு எதுவும் தரமால் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தது தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும், தம்பி முருகனிடம் சொத்து குறித்து கேட்டபோது,  உனக்கு தான் குடும்பம் எதுவும் இல்லை உனக்கு சொத்து எல்லாம் எதுக்கு என்று கூறியதால் ஆத்திரமடைந்து அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக முனியசாமி தெரிவித்தாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via