பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி

by Staff / 14-04-2023 04:14:33pm
  பைக் மீது லாரி மோதிய விபத்தில்  2 கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி

உளுந்தூர்பேட்டை பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் துடி துடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வாக், பஹிம் என்ற 2 கல்லூரி மாணவர்கள் கல்லூரி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். இந்நிலையில், இருவரும் உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. மேலும், இந்த கோர விபத்தில் அஸ்வாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பஹீம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via